சென்னை, ஜூன் 20- சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை வியாழனன்று ஒரே நாளில் சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்தது. அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டிக் குறைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை 5 ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியுள்ளது. இது உள்ளூர் சந்தை யிலும் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. சென்னையில் ஆப ரணத் தங்கம் சவரன் ஒன்று 25 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வியாழனன்று 528 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 704 ரூபாயாகவும் கிராம் ஒன்றுக்கு 66 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 213 ரூபாய்க்கும் விற்கப்படு கிறது.